Tag: கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது
நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை 45 பேர் கொரோனாவுக்கு
பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர். தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
உத்தர பிரதேசத்தில் போன் பேசிய மும்முரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை நர்சு ஒருவர் செலுத்தியுள்ளார்.
போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
கோப்புபடம்
உத்தர பிரதேசத்தின் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் அக்பர்பூர் பகுதியில் அமைந்த அரசின் முதன்மை சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக 50 வயது நிறைந்த கமலேஷ் குமாரி என்ற பெண் சென்றுள்ளார்.
அவருக்கு முதலில் ஒரு டோசுக்கான தடுப்பூசியை போட்டு விட்டு சில வாரங்கள் கழித்து அடுத்த டோஸ் செலுத்தப்பட வேண்டும். எனினும், போன் பேசியபடி அலட்சியமுடன் செயல்பட்ட சுகாதார மைய நர்ஸ் கவன குறைவாக 2 தடுப்பூசிகளை போட்டு உள்ளார்.
இதுபற்றி அந்த பெண் நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அவரிடம் நர்ஸ் சண்டை போட்டுள்ளார். இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 முறை தடுப்பூசி போட்டதில் பெண்ணின் கையில் லேசான வீக்கம் ஏற்பட்டு உள்ளது. எனினும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இந்த விவகாரம் பற்றி முதன்மை சுகாதார மையத்தின் மூத்த டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
ரசியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்கும் இலங்கை
ரசியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்கும் இலங்கை
கொவிட் வைரசை ஒழிப்பதற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பினால் தேவையான சிபாரிசு
மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்னர் இலங்கைக்கு கொண்டு வருவதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி ரஷ்ய தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தடுப்பூசி குறித்து
கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த தடுப்பூசி தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளது. Covid 19 Sputnik V என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பரிசோதனைப் பணிகள் 3 ஆம் கட்டத்தில் இருப்பதுடன் தெரிவு
செய்யப்பட்ட 45 இடங்களில் 40,000 பேருக்கு இதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்: சிங்கப்பூர் பிரதமர் சொல்கிறார்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்
பட்டாலும் உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்க பல மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும்
என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லிசியென்லூங் பேசியதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக
கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம்.
நாம் கொரோனா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன்
கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கும், புதிய தொற்றுகள் உருவாகாமல்
தடுப்பதற்கும் சோதனைகள் முடுக்கிவிடப்படும். நாம் முற்றிலும் கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.
கொரோனா பரிசோதனை
கொரோனா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியாகும்.
கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் இன்னும் வலிமையான மேம்பட்ட நாடாக மீண்டும் வரும். கிருமி தொற்றுக்கு முன் இருந்த உலகளாவிய பொருளாதாரத்துக்கு சிங்கப்பூர்
விரைவில் திரும்ப போவதில்லை. இதனால் சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும். பல தொழில்துறைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






