Tag: கைது
சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது
சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது
பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.
சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது
சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடி தேயிலை தோட்டத்திற்கு வரும்போது கம்பிக்கூடு அமைத்து பிடித்து கொன்றுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.
சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது
சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது
சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது
இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்த பொலிஸார்,
அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.
மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது
மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்.
பின்னர், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன்போது, சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டு பின்னர் அவர் வழக்குக்கு ஆஜராகவில்லை.
மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது
அதன்படி, அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரகாரம் 08 மே 2012 அன்று உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து திறந்த பிடியாணை பிறப்பித்தது.
இதேவேளை, சந்தேகநபர் நேற்று (23) அத்தனகல்ல
கஹடோவிட்ட பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின்
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவரை நாளை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது
சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது
பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவர் என கூறப்படுபவரும்,
வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்; மற்றும் ராஜகிரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகிய சந்தேக நபர்கள் நேற்று (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்இமுகத்துவாரம்இ மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில்; வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.
கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது
கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட எதிமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாச பொலிஸ் மா அதிபரினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார அண்மையில் 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது
முன்னதாக, மொனராகலையில் உள்ள எஸ்.எஸ்.பி.யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கஞ்சா செடிகளுடன் எஸ்.எஸ்.பி, இரண்டு பொலிசார் மற்றும் மூன்று சிவிலியன்களை STF கைது செய்தது.
பின்னர், எஸ்எஸ்பி சிசிர குமார ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன.
பொலிஸ் அத்தியட்சகர் குமார, எதிமலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தர்மதாச மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சாரதி சசிந்து மதுஷன் உள்ளிட்ட சந்தேக நபர்களை ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
வவுனியாவில் தமிழ் தெரு ரவுடிகள் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
வவுனியாவில் பல்வேறு பட்ட சமூக விரோத குற்ற செயல்களில் ,ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ,நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,18 வயதுடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர் .
இவர்கள் கெத்து பசங்க என்ற தெரு ரவுடி குழு இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது .
இவர்கள் போதை மாத்திரைகள் ,வாள்வெட்டு மற்றும் கொலை ,கொள்ளை ,கடத்தல் ,மிரடடல் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது .
கைதானவர்கள் காவல்துறையின் ,சிறந்த உரியமுறை விருந்து ஏற்பாட்டில் கவனிக்க பட்டு வருகின்றனர் .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ,இரண்டு லொறிகளுக்குள் மறைந்திருந்து கங்கேரிக்குள் நுழைய முயன்ற 27 அகதிகள் மடக்கி பிடிக்க பட்டனர் .
இவ்விதம் அகதிகளாக நுழைய முயன்ற பங்காளதேஸ் ,இலங்கை மற்றும் எரித்திரியாவை சேர்ந்த அகதிகள் கங்கேரிய காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இதில் இலங்கையை சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு லாரிகளும் தடுத்து வைக்க பட்டுள்ளன .
கம்பிகள் மற்றும் உலோகோங்கள் ஏற்றப்பட்ட லொறிக்குள் மறைந்திருந்து பயணிக்க முயன்ற பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
கம்பளை நகரில் இருக்கும் பிரபல பாடசாலைக்குள் கஞ்சா சுருட்டை பிடித்த நால்வர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை(16) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் இரவு நேர காவல் தொழிலில் ஈடுபடும் காவலாளியின்
உதவியுடன் சந்தேகநபர்கள் நால்வரும் பாடசாலைக்குள் இச்செயலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
குறித்த பாடசாலை வளாகத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கம்பளை
பொலிஸாரால் பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது,
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது
இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் (18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் வேட்டை 75 பேர் கைது
பொலிஸ் வேட்டை 75 பேர் கைது
இலங்கை மேல்மாகாணத்தில் பொலிஸார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையின் பொழுது 75 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட ,75 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
122 மாணவர்களுக்கு இடையில் நடத்த பட்ட தேடுதலின் பொழுதே இந்த ,கைதுகள் இடம்பெற்றுள்ளன என்கிறது காவல்துறை .
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அந்த பிரதேச சபையின் உறுப்பினருக்கும் முறைப்பாட்டாளராக பெண்ணுக்கும் இடையில், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அண்மையில் உள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, தூசன வார்த்தைகளால் ஏசிவிட்டு, சாரத்தை தூக்கி காண்பித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார்,
அந்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது
பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது
பிரிட்டனில் மிக பெரும் நாசகார தாக்குதலை நடத்தும் முகமாக செயல் பட்ட தீவிரவாதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .
இவர்களில் அதிகமானவர்கள் ஆசிய மற்றும் வெளிநாடடை சேர்ந்தவர்கள் என்கிறது அரசு .
மேலும் 190 பேர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என கணடறிய பட்டுள்ளது .
இந்த தீவிரவாத தாக்குதல்களை தடுத்திட அரசு, ஆண்டு தோறும் பல மில்லியன் பவுண்டுகளை செல்வது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கையின் முக்கிய பகுதிகளில் வசிக்கும் வறுமையியல் வாடும் குடும்பங்களுக்கு ஆசை வார்த்தை காண்பித்து ,சிறுநீரகத்தை பெற்று ,கள்ள சந்தையில் விற்று வந்த முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
150 லட்சம் அவரைக்கு ஒரு சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் யாவரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை ,திருட்டில் ஈடுபட்டமை ,மக்களை அச்சுறுத்தியமை ,வீடுகளை உடைத்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்ட நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர் ,
சுருங்க கூறின் ஆறு ரவுடிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
வீடுகள் முற்றுகை இருவர் கைது
வீடுகள் முற்றுகை இருவர் கைது
மட்டக்களப்பு – புதூர் பகுதியில் இரண்டு வீடுகளில் கசிப்பு விற்பனை இடம்பெற்ற நிலையில் இன்று அதிகாலை குறித்த வீடுகள்
முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகர் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடுப்பதற்கு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர்ப்பகுதியில் இரண்டு இடங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின்
போதையொழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டது.
இதன்போது ஒரு வீட்டிலிருந்து 40,000மில்லி லீற்றர் கசிப்பும் இன்னுமொரு வீட்டிலிருந்து 10,000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
இன்று மதியம் 12.46 மணியளவில் ,லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2, வைத்து இருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர் .
Heathrow விமான நிலைய Terminal 2 இல் சோதனைக்கு நிறுத்தாமல் சென்ற காரினை காவல்துறையினர் துரத்திய பொழுதே மேற்படி நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதான இருவரும் மேற்கு லண்டன் காவல்துறை நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இது தீவிரவாத தொடர்பு பட்ட சம்பவமா என தெரியவரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26
வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது
வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது
இலங்கையில் இருந்து ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை கடத்தி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் தற்பொழுது கைது செய்ய பட்டுள்ளார் .
இவ்வாறு கைதானவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
மேலும் 91 க்கு மேற்பட்ட பெண்கள் வதைகளிற்கு உள்ளான நிலையில் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
பொலிசார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன .
இவர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை ,குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .
கைதானவர்களிடம் இருந்து பணம் ,போதை பொருட்கள் .கத்திகள் ஆயுதங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது என்கிறது விசேட காவல்துறை வேட்டை பிரிவினர் .

































