கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை| இலங்கை செய்திகள்

21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும்
செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No posts found.
கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

588 கைதிகள் விடுதலை

588 கைதிகள் விடுதலை

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த சிறை கைதிகளில் ,

588 பேர் லங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நல் நடத்தை அடிப்படையிழும் ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை மனோவிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை மனோவிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

கொழும்பு பொலிஸ் பதிவு பற்றி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை: பொங்கலுக்கு மீண்டும் தமிழ் கைதிகள் விடுதலை மனோவிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு,

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார்.

அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம்.

இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன்.

தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

நேற்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.

அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோரும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றி சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.

இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி சொன்னார்.

இத்தகைய நடவடிக்கைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளாக (Confidence Building Measures) கருதப்படும் என நான் ஜனாதிபதியிடம் கூறினேன். இவற்றை தொடர்ந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.

அரகல கிளர்ச்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை தொடர்பில் கைதாகி உள்ளோர் தொடர்பில் தயகாக்ம் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் அரசு தரப்பினர் கருத்துகளில் இருந்து தெரிய வந்தது.

அவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையாவது இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.

ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீ சாகல ரத்னாயக்க ஆகியோரும் கூறினர்.

மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும்,
கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐநா நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.


பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஒதுக்கீட்டு திட்டம் ஒன்றையும்,
அவற்றை ஆராய ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்கவும் கோரினேன்.

Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு 417 கைதிகள் விடுதலை

ஜனாதிபதி மன்னிப்பு 417 கைதிகள் விடுதலை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 417 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


கைதிகள் தினத்தைமுன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் சிறைகளில் அடைக்க பட்டிருந்த 417 கைதிகள் இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற முதலாவது கைதிகள் விடுதலை நிகழ்வு இதுவாக பதிய பெற்றுள்ளது .

ஆண்டு தோறும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் , கைதிகள் விடுதலை செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .