ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், இன்று பிற்பகல் (22) அம்பாறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட

சமூகங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை மதிப்பிடுதல், மற்றும் பிராந்தியம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு

அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்தல் ஆகியவற்றில் இக்கூட்டம் கவனம் செலுத்துகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நிறைவடையாமல் இருந்த நிந்தாவூர் கலாச்சார மையத்தின் கட்டுமானப் பணிகள், ஜனாதிபதி தலைமையில் இன்று காலை (22) மீண்டும் தொடங்கும்.

வருங்கால சந்ததியினருக்காக அம்பாறை மாவட்டத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட

இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ. 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்தின் மொத்த உத்தேச செலவில்

செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த உத்தேச செலவு ரூ. 945.04 மில்லியன் செலவில், 31 டிசம்பர் 2027-க்குள் பணிகள் நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவர் அவர்களின் தலைமையில் அம்பாறை பல்நோக்கு நகர மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்குகின்றன.

அம்பாறை நகரில் நீண்டகாலமாக நிலவிவரும் உள்கட்டமைப்பு இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம், ரூ. 1,744.85 மில்லியன்

செலவில் செயல்படுத்தப்பட்டு, 31 டிசம்பர் 2028-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்புகள், அம்பாறை மாவட்டத்தில் பிராந்திய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுச் சேவை வழங்குதலை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகின்றன.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை யோட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம் ,பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும்

இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம்

வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.

நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி

கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.

இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதி செய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை

உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு, பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை

வீடியோ

மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை

ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
Posted in இலங்கை செய்திகள்

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா ,ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், தனது பொது பேரணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் கூறினார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

எனது பொதுக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்தாலும், ஐந்து, பத்து, ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொண்டாலும், எனது விசுவாசமான கட்சி ஆதரவாளர்கள் என்பதால் 1000 பேரை விட, அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.

2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்த நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், அதுவே தமது விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.

எஸ்.ஜே.பி தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், பல முக்கிய அரசியல் கட்சிகளில் கைகோர்க்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக அத்தகைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் அழைப்பை நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாவது நாமலின் கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது நாமலின் கூட்டம்

முதலாவது நாமலின் கூட்டம்

முதலாவது நாமலின் கூட்டம் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று (21)நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலாவது பிரச்சார கூட்டத்தை அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.