காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல் ,வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால், அத்தியாவசிய நிதிகளை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில்

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள்,

பாலஸ்தீன வங்கி தங்களின் கணக்குகளைப் போதுமான விளக்கம் அளிக்காமல் முடக்கியதாகவும் அல்லது மூடியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், அவர்களால் சம்பளம், உதவி மற்றும் தனிப்பட்ட சேமிப்புகளை அணுக முடியவில்லை.

பல கணக்குதாரர்கள், தங்கள் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதையோ அல்லது மூடப்பட்டிருப்பதையோ கண்டறிந்த பிறகு,

வாடகை செலுத்தவும்

வாடகை செலுத்தவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், தங்கள் குடும்பங்களை ஆதரிக்கவும் தேவையான நிதியை அணுக முடியவில்லை என்று மிடில் ஈஸ்ட் ஐயிடம் (Middle East Eye) தெரிவித்தனர்.

வங்கியிடமிருந்து தங்களுக்கு மிகக் குறைந்த அல்லது எந்த விளக்கமும் கிடைக்கவில்லை என்றும்,

இந்த முடிவுகளை எதிர்த்துப் போராட தெளிவான வழி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

காசாவில் நிலவும் நாள்பட்ட பணப்புழக்கப் பற்றாக்குறை மற்றும் ரூபாய் நோட்டுகளின் பரவலான மதிப்பு சரிவு காரணமாக,

பல பாலஸ்தீனியர்கள் பணத்தை அணுகவும் அனுப்பவும் வங்கிச் செயலிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகளை பெரிதும் நம்பியுள்ளனர்.

அகமது சர்தா, வங்கியின் மொபைல் செயலி மூலம் பணத்தை மாற்ற முயன்றபோது தனது கணக்கு மூடப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக MEE-யிடம் கூறினார்.

பின்னர், தனது PalPay மற்றும் Jawwal Pay பணப்பைகளும் முடக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்துகொண்டார்

காசாவில் 100 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

காசாவில் 100 மக்கள் பலி

காசாவில் 100 மக்கள் பலி

காசாவில் 100 மக்கள் பலி யாகியுள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் யூத படிகள் பாலஸ்தீனம் காசா பகுதியில் தாங்கியவாறு மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 300-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சமாதான உடன்படிக்கை முடித்து இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட இதுவரை காலப் பகுதியில் 3,427 மக்கள் பலியாகி 9647 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்பு

யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா மீது நடத்திவரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரான்ஸ் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் காட்டும் கண்டனங்களை தெரிவித்திருந்தது .

இஸ்ரேல் சமரச பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் ,தொடர்ந்து இந்த படுகொலையை நடத்தி கொண்டுள்ளது .

இந்த தொடர் படுகொலை மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பை மேம்படுத்தியுள்ளது.

45717 மக்கள் காசாவில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

45717 மக்கள் காசாவில் பலி

45717 மக்கள் காசாவில் பலி

45717 மக்கள் காசாவில் பலி , காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த இதுவரை தாக்குதலில் பலஸ்தீனத்தில் இதுவரை 45 ஆயிரத்து 717 மக்கள் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் ஒரு லட்சத்து 8000 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பலஸ்தீனம் ஹாசா மீது இஸ்ரேல் படைகள் நடத்தி வருகின்ற கொடூரமான தனமான தாக்குதலினால் இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் .

வீடியோ

இவ்வாறு அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த மக்களை இடைவிடாது துரத்தி துரத்தி இஸ்ரேல் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இதனால் அந்த மக்கள் சொல்லென்னா துன்பங்களை சாதித்து வருகின்றனர்.

இஸ்ரேல் தொடுக்கும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றங்கள் தீர்வு எடுக்காத நிலை காணப்படுகிறது.

தொடரும் இந்த மனித பேரவலம் என்ற தடுத்து நிறுத்தப்படும் மனித உயிர்கள் என்று காப்பாற்றப்படும் .

காசா மக்கள் வாழ்வில் என்று மகிழ்ச்சி காணப்படும் என என உலக மக்கள் தற்பொழுது கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .