Tag: ஓட்டோ
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு ,அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில் கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சிசுவொன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உரையில் போடப்பட்டு துணி ஒன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியவில்லை.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்ததோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை
ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை
அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஓட்டோக்களுக்கும மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான பணிப்புரை, 2017இல் வெளியிடப்பட்டது. ஆனால் அது சரியாக செயல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, இந்தச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க போக்குவரத்து அமைச்சுன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீற்றர் பொருத்துவதற்கு, ஜனவரி முதல் ஜூன் வரை சலுகை காலம் வழங்க உள்ளதாகவும், ஜூன் 01க்கு பிறகு மீற்றர் இல்லாமல் இயங்கும் ஓட்டோக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது













