Tag: ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்
தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 21/08/2025
தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு
தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத்
தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ
தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








