Tag: இலங்கை செய்திகள்
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர்
நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின்
சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு,
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய தொகையை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தில் 7790 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தில் 7790 அதிகாரிகளுக்கு பதவி உயர்வுபதவி உயர்வு
இலங்கை நாட்டின் 75 தாவது சுதந்திர தினத்தில் 7,790 இராணுவ கீழ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது ,மேலும் 208 அதிகாரிகளுக்கும் பதவி உயர்த்த பட்டுள்ளனர் .
போர் முடிவடைந்த பின்னர் இலங்கை முப்படைகளை சேர்ந்தவர்களுக்கும் ,பதவி உயர்வு வழங்க பட்ட வண்ணம் உள்ளன .
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையில் இடம் பெறும் தேர்தல் முடிவுற்றதும் ,அதில் பலத்த தோல்வியை தழுவி ,பசில் ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடுவார் என விமல் வீசிவன்சா அறிவித்துள்ளார் .
மக்களினால் ஊழல் அரசு என தெரிவித்து ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்தனர் .
அவ்வாறான நிலையில் இப்பொழுது இடம்பெறும் தேர்தல் ,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றுக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது .
அதனை கருத்தில் வைத்தே விமல் வீரவன்சா இவ்வாறு தெரிவித்துள்ளார் .











