நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை

2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க.

செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர்.

இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை

இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர். இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 8 தமிழர்கள்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 8 தமிழர்கள்

இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகத்திற்கு , எட்டு தமிழர்கள் சென்றுள்ளனர் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி, மற்றும் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக ,ஏற்பட்டுள்ள நெருங்கடியால் ,மக்கள் அகதிகளாக இந்தியாசென்ற வண்ணம் உள்ளனர்.

இவவாறு சென்ற எட்டு பேரில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது .

அகதிகளாக செந்தர்வர்கள் விசாரணைகளின் பின்னர் ,முகமக்களில் தங்க வைக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது.