அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி - மேலும் இருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக 119 இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளை திசையில் இருந்து கேகாலை திசை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது டி56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்

சம்பவத்தில் காயமடைந்த நால்வர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்

அமெரிக்கா புளோரிடா பகுதியில் கொலை சந்தேக நபர் நடத்திய,
துப்பாக்கி சூட்டில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர் .

குறித்த குற்றவாளியின் வாகனத்தை மறித்த பொழுது ,அவர் நடத்திய,
சூட்டு சம்பவத்தில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டுளளார் .இந்த சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்

இலங்கை காலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ,மர்ம துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் ,நான்கு வயது குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

இவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓட்டம் ,என்கிறது காவல்துறை .


இதுவரை துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்ட ,குற்றவாளி கைது செய்யப்படவில்லை .


விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருவதாக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவனிக்க தக்கது .