ஆறுதல் கூறி விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஆறுதல் கூறி விடு

ஆறுதல் கூறி விடு

உள்ளம் தந்தேன் உனக்காக
உதைத்தாய் என்னை எதற்காக
வஞ்சம் உன்னில் கொண்டதோ
வலி நெஞ்சம் பதிக்க எண்ணியதோ

விட்டு விலகிடா யானி
விசாலம் தந்த ஏணி
எட்டி உதைத்தாய் ஏனோ
என்னை ஏங்க வைத்தாய் ஏனோ

நம்பி நின்றேன் நானே
நாளும் மகிழ்ந்தேன் தேனே
வீனே உன்னை தொடர்ந்தேனோ
விதியால் இன்று நொந்தேனே

ஆளும் அதிகாரமாய்
ஆழ நெஞ்சு கொண்டதோ
வழி வந்தான் என்றோ
வழி விட்டதோ

என் செய்வேன் நானோ
ஏதும் தெரியவில்லை
ஆண்டவனே எனக்கு
ஆறுதல் கூறி விடு ..!

ஆக்கம் 09-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )