அரசாங்கத்தின் ஊழல் சரி ஹர்ஷா டி சில்வா
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல் சரி ஹர்ஷா டி சில்வா

அரசாங்கத்தின் ஊழல் சரி ஹர்ஷா டிசில்வா

அரசாங்கத்தின் ஊழல் சரி ஹர்ஷா டி சில்வா ,அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சரி, அரசியல்மயமாக்கல் சிக்கலானது – ஹர்ஷா டி சில்வா

பட்ஜெட் விவாதத்தைத் தொடங்கி வைத்த

பட்ஜெட் விவாதத்தைத் தொடங்கி வைத்த சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, அரசாங்கத்தின் ஊழல்

எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் அது அரசியல் நலன்களுக்காக இயக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.

சர்க்கரை இறக்குமதி ஊழல், 323 கொள்கலன்களின் சர்ச்சைக்குரிய வெளியீடு மற்றும் மின் விசா மோசடி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அவர் கேட்டார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை அடையப்பட்டதை அவர் அங்கீகரித்ததாகவும், ஆனால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்தால் அதற்கு உரிமை கோர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அதற்காக முன்பு பாடுபட்டவர்கள் இந்த நேரத்தில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம் ,மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர்.

2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தை, இரண்டு சட்டங்களையும் ஒப்பிடும் போது, பொறுப்புக்கூறல் மற்றும்

வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற விடயங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடும் மக்களும் வங்குரோத்து

நிலையில் உள்ள வேளையில், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலமொன்று முறையற்ற முறையிலும், முறைசாரா

முறையிலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த புதிய சட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சாதகமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துங்கள்.

இதன் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தலாம். இவை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியும்.

ஆனால் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டமூலத்தில் கட்டமைப்பு ரீதியான பலவீனம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இச்சட்டத்தின் மூலம் இந்தத் துறை தீவிரமாக அரசியல்மயமாக்கப்பட்டு, அமைச்சர் கூடிய அதிகாரங்களைப் பெற்று, தடைகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாது போகிறது.

பனிப்பாளர் சபையை நியமித்துக் கொள்ளும் அதிகாரம் கூட அமைச்சருக்கு செல்கிறது. இதையெல்லாம் அமைச்சரால் கட்டுப்படுத்தவும் முடியும்.

எனவே, இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் மூலம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை பலவீனப்படுத்தியுள்ளனர்.

கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இங்கு தொடராக மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை.

இது பாரபட்சமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்தின் மூலம் மின்சார சபையின் சொத்துக்களை மதிப்பிடும் முறை இங்கு குறிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான வளங்களைக் கொண்டுள்ளது.

இந்த பங்குகளுக்கு என்ன நடக்கும் என்பது இங்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமைச்சர் விரும்பியவாறு அரச வளங்களை விற்கும் போக்கு ஏற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே, கொள்முதல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்நாட்டில் 220 இலட்சம் மக்கள் மீது அதிக மின் கட்டணத்தை சுமத்தி நடந்து வரும் இந்த சுரண்டல்களை நிறுத்த வேண்டும்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் முற்போக்கான திருத்தங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Featured

Loading...
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்

அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்

அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும் ,பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய

பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (07) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன்,

இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.

அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும்

அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானி

ய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், ஐக்கிய

மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Featured

Loading...