அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்
Posted in இலங்கை செய்திகள்

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

நடிகர் அஜித் நடித்த தென்னிந்திய திரைப்படமான ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.அதேபோன்றே இன்னும் ஒரு

50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டினார்.

அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் வேலைகளையே அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட்

என்ற நிறுவனமும் அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் சுற்றாடல்துறை அமைச்சுக்கான செலவீனத்

தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை செய்துகொண்டிருக்கின்றது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக,அவர்களின் எதிர்ப்பையும் மீறி மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான

திட்டமிடல்கள் அரசின்,அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சிப்பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான காணிகளை அந்த மக்களின் வறுமை, அவர்களின்

அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள்


வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்
Posted in இலங்கை செய்திகள்

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாகவும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பாகவும் இங்கே பேசப்படுகின்றது. இது வளமான எழில் மிக்க நாடாகும். ஆனால் பொருத்தமான நிகழ்ச்சி நிரல் இன்றி வெளிநாட்டவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே நாடு இருக்கின்றது.

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் அரசியல் அதிகாரங்களை முன்னிருத்தி அவர்களுக்கு தேவையான வேலைகளையே செய்தார்களே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பது தற்போதைய பொருளாதார பின்னடைவு எடுத்துக் காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இனவாத, மதவாத சிந்தனை கொண்ட அரசாட்சி நடப்பதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். இந்த நாட்டு மக்களை தெளிவான சிந்தனையோடு ஆட்சியாளர்கள் அனுகவில்லை.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் போராட்டம் முதன் முதலில் இடம்பெற்ற, இந்தியாவில் அத்திப்பட்டி கிராமம் போன்று அழிக்கப்பட்டு காணாமல் போன கிராமமாக திருக்கோவில் பிரதேசத்தில் வயலூர் கிராமம் அமைந்துள்ளது.

இதற்கு 38 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்க ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன கிராமமாக இது இருக்கின்றது.

1985 ஓகஸ்ட் 25ஆம் திகதி யுத்த நிறுத்த சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டு கிராமமே அழிக்கப்பட்ட கிராமமாக இது உள்ளது.

இனிமேலும் இன ரீதியிலான அடக்குமுறை இருக்கக் கூடாது என்று கோருவதுடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்காக நான் இந்த சபையில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன்” என்றார்.