Tag: அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம்
செல்லாததால் , வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார் , அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
இதன் போது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு , பொலிஸர்ரை தாக்கியும் உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக பொலிஸார்
அங்கு விரைந்து , பருத்தித்துறை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வுby நிருபர் காவலன்
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்புby நிருபர் காவலன்
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலிby நிருபர் காவலன்
- நான்கு வங்கி அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்












