ரயில்
Posted in இலங்கை செய்திகள்

120 ரயில் பயணங்கள் ரத்து

120 ரயில் பயணங்கள் ரத்து

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) மாலை 6 மணிவரை சுமார் 120 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.