நெடுங்கேணியில் திடீர் மின் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நெடுங்கேணியில் திடீர் மின் துண்டிப்பு

நெடுங்கேணியில் திடீர் மின் துண்டிப்பு

நெடுங்கேணியில் திடீர் மின் துண்டிப்பு ,தேர்தல் பிரச்சாரத்திற்காக நெடுங்கேணி பிரதேசத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (20) வருகை தந்திருந்த நிலையில் பட்டிக்குடியிருப்பு

மற்றும் ஒலுமடு பிரதேசங்களுக்கான மின் விநியோக மார்க்கங்களில் மின் துண்டிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொருத்தப்பட்ட கருவிகளுக்கும் மற்றும் குறித்த பிரதேசத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக

பட்டிக்குடியிருப்பு, மாராயிழுப்பை, ஒலுமடு போன்ற பிரதேசங்களுக்கான மின்சார விநியோக மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டு நெடுங்கேணி நகர

மத்திக்கு மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் செயற்பாட்டில் பொலிஸார் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இது தொடர்பில் ஏனைய கட்சி பிரதிநிதிகளினால் தேர்தல் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மின்சார சபையின் முறைப்பாட்டு பிரிவோடு தொடர்பு கொண்டு கேட்டபோது,

நெடுங்கேணி பிரதேசத்தில் உயர் மின் மார்க்கத்தில் தென்னை மரத்தின் ஓலை ஒன்று அழுத்திய நிலையில் காணப்பட்டமையால் குறித்த பிரதேசங்களுக்கான மின்சாரம் இடையிடையே துண்டிக்கப்பட்டு வருவதாக

கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்தப் பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சீர் செய்தமையே இந்த மின் துண்டிப்புக்கான காரணம் என தெரிவித்திருந்தனர்.

நாடு முழுவதும் 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று (02) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :

  • பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
  • பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.