பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கணவரின் தாக்குதலில் மனைவி பலி

கணவரின் தாக்குதலில் மனைவி பலி

கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இரத்தினபுரி – அயகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண் பொலிஸாரால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதுடன் இவர் 45 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அயகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது