மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து

மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து

மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் பல நிகழ்வுகளுக்காக லண்டனில் உள்ளனர்

இலங்கை பொதுஜன பெரமுன

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அடுத்த சில நாட்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்க ஐக்கிய இராச்சியத்திற்கு வந்தடைந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ லண்டன் புத்த விஹாரையில் வழிபாடு செய்து தனது இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கினார். இந்த விஜயத்தின்

போது மகா சங்கத்தினரிடமிருந்து தூதுக்குழு ஆசிர்வாதம் பெற்றதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

இதற்கிடையில், SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றவுள்ள அதே வேளையில், இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் பல சந்திப்புகளிலும் ஈடுபட உள்ளார்.

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு அவர் நடத்தவிருந்த உரை ரத்து செய்யப்பட்டதாக கேம்பிரிட்ஜ் யூனியன் அறிவித்துள்ளதாக

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உட்பட பல SLPP உறுப்பினர்கள் இங்கிலாந்து செல்கின்றனர்.

தமிழர்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அந்த பல்கலைக்கழகம் நாமல் ராஜபக்ச பேச்சை இரத்து செய்துள்ளது குறிப்பிட தக்கது

இந்த விடயம் நாமலுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.