Tag: பெண் கடத்தல்
பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 9 மில்லிமீற்றர் துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கட்டுனேரிய – லான்சிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 24ஆம் திகதி சிலரால் கடத்தப்பட்டார்.
குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவியை சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை விடுவிக்க பணம் வழங்க வேண்டும் என கடத்தல்காரர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட மாரவில பொலிஸார், கொச்சிக்கடை – தலுவாகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பெண்ணைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25) மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கடத்தப்பட்ட குறித்த பெண், 08 பேரிடம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதுவே அந்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
by நிருபர் காவலன் - அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
by நிருபர் காவலன் - ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
by நிருபர் காவலன் - கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
by நிருபர் காவலன்
லண்டனில் 15 வயது பெண் கடத்தல் – தேடும் போலீஸ்
லண்டனில் 15 வயது பெண் கடத்தல் – தேடும் போலீஸ்
பிரிட்டன் Bristol பகுதியில் 15 வயது வெள்ளைக்கார சிறுமி ஒருவர் கடத்த இருபத்தி ஆறாம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
இதுவரை இவர் எங்கு உள்ளார் என்பது தொடர்பில் தெரியவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சமீப நாட்களில் இவ்வாறான சிறுமிகள் காணாமல் போவது தொடராகின்றமை குறிப்பிட தக்கது







