Tag: பணத்திற்காக மகளை
பணத்திற்காக மகளை விற்ற தாய் கைது
பணத்திற்காக மகளை விற்ற தாய் கைது
பதினான்கு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய் கைது செய்யப்பட்டதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான தாய்க்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க இடமளித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணத்திற்காக மகளை விற்ற தாய் கைது
சிறுமி 10ஆம் ஆண்டு படித்து வருவதாகவும், இந்த சட்டவிரோத செயலை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் சிறுமி நடந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளார்.
சிறுமியை பல மாதங்களாக தாய் பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளதாக சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்by நிருபர் காவலன்
- கனடாவில் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக போராட்டம்by நிருபர் காவலன்
- காசா உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறிப்பு துருக்கி கண்டனம்by நிருபர் காவலன்
- கடல் கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா கடற்படை டிரம்ப்by நிருபர் காவலன்
- நீரில் மூழ்கி வாலிபர் பலிby நிருபர் காவலன்












