Tag: தனிமைப்படுத்த
Posted in இலங்கை செய்திகள்
தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு ,
Author: நலன் விரும்பி Published Date: 24/03/2020 Leave a Comment on தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு ,
தனிமைப்படுத்த பட்ட 311 பேர் விடுவிப்பு
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக மருத்துவ
கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து
இவர்களை தங்களின் குடுப்பங்களுடன் ஒன்றினைக்கும் பணி இன்று இரானுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது.
பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மாத்தறைக்கும், இரண்டு பஸ்கள் மூலமாக கொழும்புக்கும், கண்டிக்குமாக இவர்கள் 9.50
மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதாக எமது மட்டக்களப்பு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இராணுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.







