Posted in இலங்கை செய்திகள்

டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

கல்முனை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் தொடக்கம் இது வரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்கானப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை

முன்னெடுப்பதற்காக சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் வேகமாக பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்பு பரவுவதற்கு வசதியாக வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 10,150 டெங்கு நோயாளர்கள்

    இலங்கையில் 10,150 டெங்கு நோயாளர்கள்

    இந்த வருடத்தில் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் 10,150 பேர் அடையாளம்

    காணப்பட்டுள்ளனர். ஆகக்கூடுதலான நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களின் எண்ணிக்கை 2,975 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 2,150 நோயாளர்கள் அடையாளம்

    காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 891 பேர் பதிவாகியுள்ளனர். களுத்துறை

    மாவட்டத்திலும் 572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்

      இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்

      இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக டெங்கு நோயானது அதிகமாக பரவி வருகிரது


      இந்த நோயின் தாக்குதலில் சிக்கி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      சுற்றுப்புற சூழல் அசுத்தம் காரணமாகவே இந்த நோயானது பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு

        டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு

        இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6,389 ஆக உயந்துள்ளது

        நிகழ் காலத்தில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்களையு இந்த கணக்கில் இலங்கை அரசு இனைத்துள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது

        இவ்விதம் யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களை டெங்கு நோயின் தாக்குதலில் இறந்தார்கள் என

        சடலங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

          Posted in இலங்கை செய்திகள்

          திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்

          திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்

          இலக்கை இரத்தினபாரிமாவட்டத்தில் கடந்த 90 நாட்களில் 89 பேர் டெங்கு நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்

          இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இதனை தடுப்பதற்குரிய விழிப்புணர்வு கருத்தரங்ககுள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க பட்டு வருகிறது

          சுற்று புறத்தை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாக இந்த நோயானது அதிகமாக பரவி

          வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

            முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

            கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04 ஆம் , 05ஆம் , 06ஆம்

            மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

            இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு

            உட்படுத்தப்படவுள்ளதாகவும் , இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன்

            பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.

            இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole)

            ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய

            இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும்

            அறிவிக்கப்ட்டுள்ளது.
            கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக

            முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

                Posted in உலக செய்திகள்

                பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

                பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

                பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

                அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

                டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி

                இது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:-

                பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.

                அதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

                டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.