Posted in Uncategorized

ஜப்பான் கடலுக்குள் நுழந்த சீனா போர் கப்பல்கள்

ஜப்பான் நாட்டு செங்கு தீவு பகுதிக்குள் சீனாவின் இரண்டு மிகக்கும் போர் கப்பல்கல் நுழைந்து சென்றுள்ளன ,

சீனா நுழைவு

இந்த சீனாவின் அத்துமீறல்நுழைவை அடுத்து சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது

போர் பதட்டம்

சீனாவின் இந்த அத்துமீறல்நடவடிகை நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது ,

ஜப்பானின் சில தீவு கூட்டங்கள் தமது என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்விதமான சர்ச்சைக்குரிய பகுதிக்குள்ளே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளது

எச்சரிக்கை

நாம் எப்போதும் எங்கேயும் நுழைவோம் என்பதைஇந்த நடவடிக்கை மூலம் ஜப்பானுக்கு சீனா கூறியுள்ளதை அவதானிக்க முடிகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு ஜப்பான்1,400 மில்லியன் ரூபாய் நிதி உதவி

இலங்கைக்கு ஜப்பான்1,400 மில்லியன் ரூபாய் நிதி உதவி

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக

மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளதுடன், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவசர மருத்துவ நிலையை கவனத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம், 2020 மார்ச் மாதம் முதல் ஜப்பானிய அரசாங்கத்தினால் மருத்துவ சாதனங்கள் மற்றும்

தொழில்நுட்ப உதவிகள் போன்றன வழங்கப்பட்டவண்ணமுள்ளன. இந்த சவால் நிலையை கட்டுப்பாட்டினுள் பேணுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான

தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் தொடர்ந்தும் மருத்துவ

சேவைகளை வழங்குவதற்கு மேம்படுத்திப் பேணும் வகையில், உதவிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாதனங்களில் MRI ஸ்கானர்கள், CT ஸ்கானர்கள், சிஸ்டம்கள் மற்றும் சென்ரல்

மொனிடர்கள் போன்றன அடங்குகின்றன. இவை உடனடியாக கொவிட்-19 சிகிச்சைகள் வழங்கப்படும் தெரிவு செய்யப்பட்ட

வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் பொருத்தப்படும்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால மற்றும் சுமூக உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், கொவிட்-19 பரவலை

கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையில் நிலைபேறான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஜப்பானிய அரசாங்கம்

பங்களிப்பு வழங்கும். இது இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

      Posted in உலக செய்திகள்

      ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்

      ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்

      இன்று திங்கட்கிழமை அதி காலை கிழக்கு ஜப்பான் கடல் பகுதியை அண்மித்து

      இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,இந்த நில அதிர்வு 6.4 ஆக பதிவாகியுள்ளது

      சுனாமி அனர்த்தம் நிகழும் அபாயம் உளதாக எதிர் பார்க்க படுகிறது ,

      மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் ,வீடுகளை விட்டு வெளியில் உலாவுவதை அவதானிக்க முடிகிறது

      இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ..சில

      மணித்தியாலங்களில் இதே பகுதியில் முழுமையான விபரங்கள் இணைக்க படும்

      quake,strikes,off Japan,coast,
      quake,strikes,off Japan,coast,