Tag: செய்யவில்லை
அரசாங்கம் பேசுகிறது ஒன்றும் செய்யவில்லை
அரசாங்கம் பேசுகிறது ஒன்றும் செய்யவில்லை
அரசாங்கம் பேசுகிறது ஒன்றும் செய்யவில்லை ,கொழும்பு நகரத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் சிக்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவி வந்தாலும், சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் செயலற்ற நிலையில்
இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, நேற்று (21) தெரிவித்தார்.
“சிக்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, சுகாதார அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இது குறித்து எதுவும் செய்யவில்லை.
நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றும் அவர்கள் இது குறித்து அமைதியாக இருக்கிறார்கள்” என்று விஜேவர்தன, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களும், குறிப்பாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், இந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், “அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட அதன் பிரதிநிதிகளை அமெரிக்காவிற்கு அனுப்பியிருக்க வேண்டும்.
அத்தகைய உரையாடல் நடந்திருந்தால், பரஸ்பர கட்டணங்கள் தொடர்பாக இலங்கை சிறந்த நிலையைப் பெற்றிருக்கும். இருப்பினும், அரசாங்கம் ஆரம்பத்தில் அதில் கவனம் செலுத்தவில்லை.
“இந்த அரசாங்கம் பேச மட்டுமே செய்கிறது, ஆனால் சொன்னபடி நடப்பதில்லை.
சில நாட்கள் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதை மறந்துவிட்டார்கள்.
அவர்கள் மக்களைக் கைது செய்கிறார்கள், சில நாட்களுக்குள் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள்.
ஊழல் ஒழிப்பு பற்றி எதுவும் நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.







