Tag: சிறுமி பலியான சோகம்
Posted in இலங்கை செய்திகள்
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
Author: நிருபர் காவலன் Published Date: 19/06/2023
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
மாத்தறை, நெடொல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில், வீடொன்றில் இருந்த சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
பாதி கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்தில் இரண்டு சீமெந்து தூண்களுக்கு இடையில் ஊஞ்சல் போன்ற தொட்டிலை தந்தையும் மகளும் தயார் செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் மேல் தளத்தில் குறித்த சீமெந்து தூண் கம்பிகளை பயன்படுத்தி முறையான வகையில் நிர்மாணிக்கப்படாமல் நான்கு ஆணிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
No posts found.







