மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம் வெனிசுவேலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கப் பேரிடரில், மீட்புக் குழுவினரின் உதவி கிடைக்காத நிலையில்,

தந்தை ஒருவர் 11 நாட்களாகத் தனது வெறும் கைகளால் இடிபாடுகளைத் தோண்டி,

உயிரிழந்த தனது 12 வயது மகளின் உடலத்தை மீட்டெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெனிசுவேலாவின் லா குவைரா (La Guaira) பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து பெரும் அழிவை ஏற்படுத்தின.

இதில் அலெக்சாண்டர் என்ற தந்தையின் பொதுக் குடியிருப்பு வீடும் முழுமையாக இடிந்து வீழ்ந்தது.

இடிபாடுகளுக்குள் அவரது 12 வயது மகள் சிக்கிக்கொண்டார்.

இந்தநிலையில் மீட்பு குழுவினரின் உதவி கிடைக்காத நிலையில் உறக்கமோ, உணவோ இன்றி திகைத்துப் போயிருந்த குறித்த தந்தை, தனது மகளை

எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கில், இடிபாடுகளுக்கு இடையே வெறும் கைகளால் மண்ணையும் கொங்கிரீட் துகள்களையும் தோண்ட ஆரம்பித்தார்.

11 நாட்கள் தொடர்ச்சியாகப் போராடிய அவர், இறுதியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகளின் உடலத்தை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டுள்ளார்.

சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட தனது மகளின் உடலத்தை

சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட தனது மகளின் உடலத்தை பிளாஸ்டிக் பையில் ஏந்தியவாறு அந்தத் தந்தை கதறியழுத காட்சி இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சடலத்தை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு
Posted in உலக செய்திகள்

சடலத்தை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு

சடலத்தை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு

சடலத்தை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு ,இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி

இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

உலகின் பல பகு​தி​களில் இறந்​தவர்​களின் உடல்​கள் அடக்​கம் செய்​யப்​படும் அல்​லது தகனம் செய்​யப்​படும். ஆனால், இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா

பழங்​குடி​யினர், தங்​கள் குடும்​பத்​தில் இறப்​பவர்​களின் உடலை பதப்​படுத்தி வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர்.

இந்​தோ​னேசி​யா​வின் தெற்கு சுலவேசி பகு​தி​யில் உள்ள டனா டரோஜா பகு​தி​யில் இந்த வினோத வழக்​கம் உள்​ளது.

இறப்பு என்​பது மற்​றொரு மிகப் பெரிய பயணம்

இறப்பு என்​பது மற்​றொரு மிகப் பெரிய பயணம் என அவர்​கள் நம்​பு​கின்​றனர்.

இப்​பகு​திக்கு சென்​றால் அங்​குள்ள பழங்​குடி​யினர், இறந்​தவர்​களின் உடல்​களை பதப்​படுத்தி அவற்றை டாங்​கோனன் என்ற இடத்​தில் வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர்.

இறந்​தவர்​களின் உடல்​களு​டன் அவ்​வப்​போது பேசுகின்​றனர். அவற்​றுக்கு உணவும் படைக்​கின்​றனர். இரண்டு ஆண்​டு​களுக்கு ஒரு முறை பதப்​படுத்​தப்​

பட்ட உடலை சுத்​தம் செய்து அவற்​றுக்கு புத்​தாடை​யும் அணி​வித்​து, தங்​கள் குடும்​பத்​தில் புதி​தாக பிறப்​பவர்​களிடம் அறி​முகம் செய்​கின்​றனர்.

பதப்​படுத்​தப்​பட்ட அந்த உடல்​கள் தலை​முடி மற்​றும் வாயில் பற்​களு​டன் காய்ந்த நிலை​யில் உள்​ளன. சிலரது உடல்​கள், அவர்​களின் வாழ்க்​கைத் துணை இறக்​கும் வரை பாது​காக்​கப்​படு​கின்​றன.

பல ஆண்​டு​கள் கழித்து இந்த உடல்​களுக்கு அதிக பொருட் செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறு​திச் சடங்​கு​கள் 5 நாட்​களுக்கு நடத்​தப்​படு​கிறது. அப்​போது

எரு​மை, பன்​றிகள் பலி​யிடப்​பட்டு நூற்​றுக்​கணக்​கானோருக்கு விருந்​தளிக்​கின்​றனர். இந்த இறு​திச் சடங்​கில் தங்​கள் வாழ்​நாள் சேமிப்பு முழு​வதை​யும் செல​

விடு​கின்​றனர். இறு​தி​யில் ஒரு குடிசை​யில் வைத்து இறந்​தவர்​களின் உடல்​ எரியூட்​டப்​படு​கிறது.