புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்

புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்

தமிழீழ விடுதலை புலிகளின் போரியல் நாயகனாகவும் ,தமிழீழ தேசிய தலைவரின் காவலனாக விளங்கிய, கேணல் சல்ஸ அவர்களின் தந்தையார் மரணமாகியுள்ளார் .

அவுஸ்ரேலியாவில் வசித்து வந்த கேணல் சால்ஸ் அவர்களின் தந்தை, சண்முக நாதன் ஐயா அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில், தனது 91 ஆவது அகவையில் காலமானார்.

கேணல் சால்ஸ் அவர்களது , தந்தையின் பிரிவு தமிழர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

தமிழீழ விடுதலை போருக்கு, கேணல் சால்ஸ் என்ற சிறந்த மாவீரனை தந்து ,தமிழர் தேசத்தை காப்பாற்றிட உழைத்த, பெரும் தளபதியின் தந்தை மரணம் ,தமிழீழ தேசத்தினை நேசிப்பார்கள் மத்தியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் துயரில் ,எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .வீழ்ந்து போனது நீ மட்டும் அல்ல எமது விடுதலையும் தான் .

செய்தி மூலம் ஈழம் ரஞ்சன் – நன்றி