சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை
Posted in இலங்கை செய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை

சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை

சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை அளிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி

சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) மத்திய குழுவின் சர்வதேச துறை இலங்கைக்கு 1 மில்லியன் RMB மதிப்புள்ள நிவாரணப்

பொருட்களை வழங்கும் என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

X இல் ஒரு பதிவில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) இலங்கை மக்களுக்கு அன்பும் அக்கறையும்” என்று தூதரகம் கூறியது.

மத்திய குழுவின் உறுப்பினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டக் குழு சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தது.

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
தீப்பிடித்து எரியும் வாகனங்கள்

திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா மற்றும் சில மாவட்டங்களில் இன்று கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் மற்றும்

கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் பாஜக சார்பில்

இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியால் பிரச்சனை உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை கடந்து பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டுள்ளது.

பாஜகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு தீ வைத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பாஜக கூறி உள்ளது.