Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கதறி அழும் காதல் ….!

கதறி அழும் காதல் ….!

உன்னை நம்பி வந்தேனே
உயிரை தந்து நின்னேனே
தப்பாய் போய்ச்சு இன்று
தவறு செய்தேன் நன்று

ஆடை உருவி அழகை தடவி
அள்ளி தின்றாய் நன்று
அன்பை பறித்து அழுகை வைத்து
அட போட்டாய் ஏனோ கொன்று …?

கூண்டை விட்டு பறக்கத்தானே
கூடி வந்தேனே
கூடி ஆடி மகிழ்ந்துவிட்டு
கூண்டில் விட்ட தென்ன …?

மானே தேனே மயிலே குயிலே
மயங்கி சொன்னாய் அன்று
மயக்கம் தெளிந்து விழித்தாயோ
மறந்து இன்று பறந்தாயோ …?

கண்ணீர் மட்டும் பரிசாக
கண்ணில் இன்று தந்தாயே
மறந்து பறந்தாய் நன்றே
மறக்க மாட்டேன் இன்றே …..!

வன்னி மைந்தன் (ஜெகன் )

ஆக்கம் 13-06-2020