இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் இனிமேல் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களை அரசாங்கம் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது

நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள்

நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டது குறித்து இலங்கை

அரசாங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலை தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டதா, மேலும் இந்த நடவடிக்கை கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின்

கட்டமைப்பிற்குள் வந்ததா என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

“இந்த நடவடிக்கைகள் நமது EEZ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுவதற்கு வழிவகுத்தன, இது நமது வணிக நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். கப்பல்

செலவுகள் மற்றும் காப்பீடு

செலவுகள் மற்றும் காப்பீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வாழ்க்கைச் செலவு உட்பட நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மேலும் இராணுவ நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாது என்பதற்கான உத்தரவாதங்களை அமெரிக்காவிடம் இருந்து

பெறவும், சாத்தியமான பொருளாதார தாக்கங்களைப் பற்றி விவாதிக்க கப்பல் நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு அதிகாரிகளுடன் ஈடுபடவும் கட்சி அரசாங்கத்தை மேலும் கேட்டுக் கொண்டது.

காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று (23) மாலை சுங்கத்துறையினர் இந்திய கடலோர காவல்

படையினருடன் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சர்வதேச கடல் எல்லையில் இருந்து 12 நாட்டில்கள் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த

இலங்கை, புத்தளம் பகுதியை சேர்ந்த 4 மீன்பிடி படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர்

பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த

படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து வந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து மரைன் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கைது செய்யப்பட்ட 08 இலங்கையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை பெறுவதற்காக காத்திருந் தார்களா? அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தார்களா? என விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது அவர்கள் மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்