ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி – நச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை சட்டவிரோதமாக படகில் புறப்பட்டுச் சென்று இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்தனர்.

அவர்களை மரைன் பொலிஸார் மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.