Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எல்லாம் நீயே

எல்லாம் நீயே

உன்னழகை எனக்கு மட்டும்
உயிரே நீ தரவேண்டும்
என் விரலை தந்து விட்டேன்
எடுத்து நீ வருட வேண்டும்

செந்தமிழும் உன்னை வந்து
செவ்வந்தியே கொஞ்ச வேண்டும்
செவ்விதழ்கள் இரண்டை மட்டும்
சேர்த்தெனக்கு தரவேண்டும்

ஆள் இல்லா உலகத்திலே
அடியே குடி புகுவோமா .?
அங்கு மட்டும் இல்லறத்தை
அப்படியே ருசிப்போமோ …?

நீயும் நானும் தனிமையில
நிமிடங்களை தொலைக்க வேண்டும்
கற்பனையில் கண்டவற்றை
காட்சிகளாய் தீட்ட வேண்டும்

உன் மடியை எனக்கு மட்டும்
உறங்க நீ தரவேண்டும்
உலகத்தில் நீ மட்டும்
உயிரோடு இருக்க வேண்டும் …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -26-10-2020