Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி நம்புவேன் …?

எப்படி நம்புவேன் …?

நீ நினைத்த போதெல்லாம்
நிற்காமல் வந்தவன்
நீ அழைத்த போதினில்
நிற்காமல் போபவன்

ஏன் என்று கேளாது
ஏராளம் செய்தவன்
ஏய் நீ கேட்டுமே – இப்போ
ஏதுமே செய்யாதவன்

போலி என்று உன்னை
பொறுப்புடன் கண்டபின்
நான் தேடி வருவேனா ..?
நம்பிக்கை நடுவேனா …?

காயங்கள் ஏராளம்
கட்டிகளாய் நெஞ்சுக்குள்
வலிக்கிறது விழி
வழி எலலாம் கண்ணீர்

கோபத்தில் அறைந்திருந்தால்
கோடி மகிழ்ந்திருப்பேன்
ஏமாற்றி நடக்கையில
எப்படி நம்புவேன் …?

வன்னி மைந்தன்
ஆக்கம் -29-07-2020

Home » எப்படி நம்புவேன்