Tag: என்னவனே 1
என்னவனே 1
என்னவனே 1
என்னை
மீட்டிட வருவாயா..?
பல ஆண்டுகளாய்
பொத்தி வைத்த பொக்கிசமாய்
வலி நிறைந்த பக்கதின்
ஒரு பகுதி இது..
உன் நினைவுகளில்
இருந்து மீள முடியாமல்
தவிக்க்கும் பக்கங்கள்
உனக்காக கவி வடிக்க
வார்த்தைகளை
தேடி அழைகிறேன்
அதுவும் உன்னை போலவே
ஓடி ஒழிகிறது
ஈரேழு ஆண்டுகள்
ஓடி ஒழிந்த போதும்
உன் நினைவுகளில் இருந்து
மீண்டு வர முடியாமல்
துடி துடித்து போகிறேன்
உன் அன்பை
ஈடு செய்ய
எத்தனை
எத்தனையோ
முயற்ச்சிகள்
அத்தனையும்
தோல்வியில்
மட்டுமே ..
துரோகத்தாலும்
நிறைந்தவையும்..
உன்னை போல்
எனக்கு அன்பு
காட்ட யார்
இருக்கா எனக்கு ..?
யாரும் இல்லா அனாதையாக..
மீண்டும் வா
மீண்டும் வருவாயா..?
என்னவனே 😢
இரவு .. பகல்
மழை ..வெயில் பாராமல்
எனக்காய் ஓடி திரிந்தவன்
ஓர் குழந்தையை
போல் கட்டி அணைத்தவனே
இன்று என்னை
கண்டுக்க ஆள் இல்லா
தனிமையில் தள்ளி
அனாதை ஆக்கி
சென்றதும் ஏன்..? 😢
உனக்காக நான் இருப்பேன்
என்றாய்..
உனக்காகவே என் நாட்கள்
நகருது என்றாய்..
உனக்காகவே என் பொழுது
விடிகிறது என்றாய்
ஆனால்
என் பொழுதுகளை
இருளாக்கி போனதும்
ஏன் ..??
நீ செய்த
ஒற்றை தவறு
என்னை அனாதை
ஆக்கி விடும் என்று
நான் எதிர் பார்த்து
இருக்கவில்லை
இன்று
என் வாழ்க்கை
எனும் பக்கத்தில்
ஆயுள் கைதி
குற்றவாளியாய் ..
கூண்டில்
அடைக்கப்பட்டு
நிர்கதி அற்று
தினம் தினம்
சித்தரவதைகளை
அனுபவித்து வருகிறேன்..
ஆயுல் வரை …
இல்லை
என் சாவிலும்
பாக்க வேண்டாம் என்று
சத்தியம் செய்தவள்
நான் ..
அந்த சத்தியத்தை
கலைத்து
மண்டி இட்டு கேக்கிறேன்
ஒரு முறையாவது
வந்து விடு ..
உன் மார்போடு அணைத்து
உன் மடியில்
தலை சாய்த்து
என் இதயத்தில் இருக்கும்
உன்னிடம் …
உனக்காக
நான் பட்ட வலிகளை
கேட்டு தெரிந்து கொள்
என் மூச்சி
உன் மடிமீது
அமைதியாகும் வரை
மறந்து விடாதே
நீ போகும் போது
ஒரு கை பிடி
மண்ணாவது
போட்டுச் செல்…
மீண்டும் வா
மீண்டும் வருவாயா..?
என்னை
மீட்டிட வருவாயா..?
தொடரும் …







