இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல்
Posted in இலங்கை செய்திகள்

இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல்

இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல்

இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல் ,நேபாளத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட

இஷாரா செவ்வந்தி

இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72 மணி நேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு,நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (16) காலை வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்தே நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்ட மற்ற சந்தேக நபர்கள் ஜே.கே. பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர் ஆவார்.

குற்றக் கும்பல் தலைவரான சஞ்சீவ குமார

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற எண் 6 இல் நீதிமன்ற கூண்டில் வைத்து பிப்ரவரி 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிதாரிக்கு, துப்பாக்கியை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை,

புத்தளத்தில் வைத்து அன்றையதினமே துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஷாரா எப்படி நேபாளத்திற்கு தப்பிச் சென்றார்
Posted in இலங்கை செய்திகள்

இஷாரா எப்படி நேபாளத்திற்கு தப்பிச் சென்றார்

இஷாரா எப்படி நேபாளத்திற்கு தப்பிச் சென்றார்

இஷாரா எப்படி நேபாளத்திற்கு தப்பிச் சென்றார் ,புதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வந்த நிலையில்,

நேற்றைய தினம் நேபாளத்தில் இலங்கையின் விசேட பொலிஸ்

நேற்றைய தினம் நேபாளத்தில் இலங்கையின் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவருக்கு தஞ்சமளித்த ஒரு சந்தேகநபரும் மேலும் 3 சந்தேகநபர்களும் பெண்ணொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கம்பஹா மற்றும் கொழும்பில் போதைப்பொருள் கடத்தல்களை வெளிநாடுகளிலிருந்து நிர்வகிக்கும் குழு எனவும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடல் மார்க்கமாகவே தப்பிச் சென்றுள்ளார்

இஷாரா செவ்வந்தி சட்ட விரோதமாக கடல் மார்க்கமாகவே தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

மேலும், சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 சந்தேகநபர்களில் 18 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களால் சேகரிக்கப்பட்ட 140 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துக்கள்

அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான

விசாரணைகளும், சர்வதேச சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் பிரதி பலனாக இதுவரையில் 40 சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இவ்வாண்டுக்குள் 18 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை ,பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி

இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகளை குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பவ தினமான பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சில மணி நேரத்திற்குள்ளே செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும்

அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.”

புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களின் போது, ​​பல்வேறு வதந்திகள் பரப்பி விசாரணைகளை திசை திருப்புவதற்காக சிலர் இதுபோன்ற

தகவல்களை வெளியிடுகின்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கு புலனாய்வுக் குழுக்கள் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளார்.