Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இன்றே நீ செத்து விடு …!

இன்றே நீ செத்து விடு …!

கடவுள் ஒருவன் இருக்கிறான் – அவன்
கண்ணீர் தர மறுக்கிறான்
வாழ வழி காட்டுறான் – அவன்
வாழ்விற்க் ஒளி வீசிறான்

ஊரில் உள்ள மனிதர் எல்லாம்
உன் உறவு என்று எண்ணிவிடு
உலகை ஆளும் கடவுள் போல
உளம் மகிழ சிரிப்பு கொடு

நீயும் நானும் மனிதர் என்றால்
நின் மதியாய் வாழ விடு
நித்தம் இடும் இழிவுகளை
நீயும் இன்று நிறுத்தி விடு

ஏழை இன்று நாளை உலகை
ஏறி நன்றே ஆள்வான் – நீ
எறிந்த சொல் லடியில்
ஏறி நின்றே ஆடுவான்

உன் பணத்தில் மேலானால்
உன்னை அவன் மதிப்பானா
உந்தன் தலை கனத்தை
உருட்டி அவன் அடிக்காணா

விந்தை பூரி உலகினிலே
விடயங்கள் நிறைந் திருக்கு
வினை விதைத்தார் வினையறுக்கும்
விடயங்கள் நிகழ்ந் திருக்கு

சிந்தை உளார் மனிதரெல்லாம்
சிகரத்தில் நிறைந் திருக்கு
விந்தை உளார் தாமெனே
விதைத் தவர் நடந்திருக்கு

முந்தை உரை நாவெல்லாம்
முன் செயலில் தவித்திருக்கு
பிந்தை நிலை அறியாநிலை -விழி
பிரளயத்தில் மூழ்கிருக்கு

முந்தை வினை விதைக்கும் முன்
முளை வேர் நன்றே அறிந்துவிடு
பிந்தை விதை வான் எழுந்தால்
பிடரி இழந்து மாண்டு விடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 12-01-2022