யாழில் இடம்பெற்ற சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு

யாழில் இடம்பெற்ற சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

தேர்வில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த அடுத்த கட்ட தேர்வுகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு 75க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்முறை இந்த அழகி போட்டி இலங்கையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.