Tag: அரச ஊழியர்
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபை தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி
இவ்வருட ரமழான் மாதம் மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்ள கூடிய வகையில் பணி அட்டவணையை தயாரிக்குமாறு குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், அரச சேவையில் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபைகளில் தகுதியான முஸ்லிம் அதிகாரிகளுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 4000 ரூபாய்கள் சிறப்பு முறைப்பணமாக செலுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
இலங்கையில் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் ,மக்களை நாடி அரசு புதிய புதிய சலுகை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது .
தேர்தல் முடிவுற்றதும் இவை நிறுத்த படும் . அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு அரசு தனது தாண்டவத்தை ஆடும் .
இது வாக்காளர்களின் மறதியை மனதில் வைத்து ,அரசுகள் செய்து வரும் அரசியல் நிலை செயற்பாடுகளாகும் .
பணம் இன்றி தவித்து வரும் இலங்கையில் ,மேலதிக பணத்தை மக்களுக்கு இவ்வாறு வழங்க முடியும் என்பதை மக்கள் நினைவில் வைத்தால் நன்று .








