Tag: அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்
அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 16/02/2022 Leave a Comment on அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை
அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக பதுளை – மகளிர் மகா வித்தியாலய
அதிபரை முழங்கால் இட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போதிய அளவு சாட்சியங்கள் இல்லாத காரணங்களினால் உயர்நீதிமன்றத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சாமர சம்பத் தசநாயக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பதுளை
மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்கால் இட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
.






