Tag: அங்கஜன்
மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்
மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்
மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன் ,தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் செயற்படுவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் நேற்று (31) பிற்பகல் யாழ். நாவாந்துறை பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
9 பாராளுமன்ற ஆசனங்களாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது 6 ஆசனங்களாக குறைந்து இருக்கிறது. அதற்கான பிரதான காரணம் வாக்களர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை.
கிராமங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு
அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு
அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி
துஷ்மந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களது ஆதரவினை வழங்கினர் .
கொழும்பு, ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யவுள்ளனர் .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ,2015 இல் தேசியப் பட்டியல்
உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது
தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார்.
அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் செயலாற்றி வருகின்றார் .
சாரதி துஷ்மந்த மித்ரபால, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது














