Tag: விடுதலை புலிகள்
பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலை புலிகள் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசா முழங்கியுள்ளார் .
கழுத்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுதே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ வீரர்கள் காப்பற்றினார்கள் என தெரிவித்ததன் ஊடாக ,அவர்கள் தேச துரோகிகள் என்பதை போல அவரது இனவாத பேச்சு அமைந்துள்ளது .
இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து மீள வம்புக்கு இழுத்து தமிழர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .
நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இராணுவ வீரர்கள் வழங்கிட ,அரசியல் பயங்கரவாதிகள் செய்த நாசகார வேலைகள் ஊடாக மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் என்கின்றார் .
தேர்தலை மையமாக வைத்து அனைத்து கட்சிகளும் ஓடி கொண்டிருக்க ,இப்பொழுது ஐயா தமிழர்கள் ஓட்டை சிதைக்கும் நடவடிக்கையில் இவ்விதம் தெரிவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே சஜித் பிரேமதாசாவுக்கு மக்கள் தெரிவிக்கும் கருத்தாகும் .
பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
தமிழீழ விடுதலை புலிகளை தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க செவ்வி .
தமிழர் தேசத்தின் தலைமகன் வழங்கும் ஆற்றல் மிகு பேச்சும் அதில் உள்ள பலவீனம் என்ன என்ன என்பதை மேப்பம பிடிக்கும் ஊடக நபரின் காட்டி கொடுப்பையும் இங்கே தமிழ் மக்கள் உற்று கவனிக்க .
தலைவர் பிரபாகரனை அழித்து ஒழிக்க இந்தியா உளவுத்துறை புரிந்த சதிகளின் தொடர்ச்சியாக கஸ்பர் செயல்பட்டார் என்பதை இந்த காணொளி மூலம் அப்பட்டமாகிறது .
இந்தியா காரங்க காட்டி கொடுப்பார்கள் என்பது மீளவும் உறுதியாகியுள்ளதான கொதிப்பு தமிழர் மக்கள் மத்தியில் எழுந்திட இவ்வாறான துரோகிகளின் பதிவுகள் ஒன்றாகும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&t=40s
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு
- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை- மகிந்த உறுமல்
விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை- மகிந்த உறுமல்
இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் வீதிகள் தோறும் கொலை செய்யப்பட்ட யுகமொன்று மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு இம்முறை
தேர்தலில் தெளிவான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் இன்று (2020.07.27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர்
, அன்றைய பயங்கரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் படித்த, புத்திசாதுர்யம் மிக்க இளைஞர்களை நாடு இழக்க நேரிட்டதாக குறிப்பிட்டார்.
பாரியளவிலான பட்டதாரிகள் இந்த பயங்கரவாதத்தின் போது கொலை செய்யப்பட்டதுடன், அதில் 4 ஆயிரத்து 210 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக
சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு
முயற்சித்தாலும் அந்த முயற்சியை தோற்கடிக்க எமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று.
அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தாலும் பிரபாகரன் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும்
தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது
எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
























