வாகன விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தில் இருவர் பலி ,ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல வீதியின் உடவல பிரதேசத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் துவிச்சக்கரவண்டியில் சென்றவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.

விபத்தில் மரணித்தவர்கள் 28 மற்றும் 73 வயதுடைய பரவர்தனஓய மற்றும் ஹசலக பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சடலங்கள் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் 3பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் 3பேர் பலி

வாகன விபத்தில் 3பேர் பலி

வாகன விபத்தில் 3பேர் பலி ,நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் உள்ள ஒலுமடு பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாலத்தின் கொங்கிரீட் தூணில் மோதியதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பாலத்தின் அடியில் உள்ள ஆற்றில் விழுந்து இறந்தார்.

உயிரிழந்தவர் பரந்தன் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கமுவ-மொரகொல்லாகம வீதியில் உள்ள வலத்வெவ பகுதியில், மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகானில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த செலுத்துனர், எஹெட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் அபோகமவைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு-கண்டி வீதியில் உள்ள தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, ​​சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், அது வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த ஒரு கெப் வண்டியில் மோதியது.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இறந்தவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரியவந்துள்ளது.

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு ,மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்து, ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பேருந்து கல்லடிப்பால சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் இருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இருவர் மரணம்

வாகன விபத்தில் இருவர் மரணம்

வாகன விபத்தில் இருவர் மரணம் ,வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகராஜா யோகராசா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி , மாங்குளம் போலீஸ் பிரிவில் கடந்த தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காந்தி வீதியின் கொக்காவில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,

பயணித்த இரு பெண்கள் ,ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 வயதான பெண் ஒருவரை தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன

இலங்கையில் தொடராக வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

தரமான வீதிகள் காணப்படுவதால் ,தாராளமாக வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதால் இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களை குறைக்க வேண்டுமாக இருந்தால் வீதி சாரதிகள் பொது வீதி விதிமுறைகளையும் பின்பற்றினால் மட்டுமே ,அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அதனை மறைத்து தற்பொழுது பயணிகளை ஏற்றியவாறு சாரதிகள் வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி செல்வதே, இந்த விபத்து ஏற்பட காரணம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம் பெற விபத்து காரணமாக நாள்தோறும் இந்த விபத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .

அதே வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் வருடம் ஒன்றுக்கு இந்த வீதி விபத்து காயமடைந்து வருகின்றனர் .

அவ்வாறான வீதி விபத்துக்களை தடுக்கும் முகமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல்துறையினர் தெரிவித்து வருகின்றது .

அதை கடந்து இந்த விபத்துக்கள் தொடர்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளதே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்

வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்

வாகன விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் , இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியியுள்ளனர் .

164 விபத்துக்கள் சம்பவித்துள்ளன , அதில் 136 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .

சாரதிகள் அலட்சியே போக்கே இந்த வாகன விபத்துக்கள் இலங்கையில் அதிகரித்து செல்ல காரணமாகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

Featured

Loading...
மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் நால்வர் காயம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வாகன விபத்தில் நால்வர் காயம்

வாகன விபத்தில் நால்வர் காயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (15) கார் ஒன்று, தரித்து நின்ற

முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

காத்தான்குடியை நோக்கி சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த விபத்து இடம் பெற்றதாக அருகிலிருந்த பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பயணம் செய்த பயணிகள் மூவருமாக நால்வர் காயமடைந்துள்ளதோடு கார் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தில் எட்டு பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் எட்டு பேர் காயம்

வாகன விபத்தில் எட்டு பேர் காயம் ,

கடந்த தினம் இலங்கை இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் சிக்கி எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்த யாவரும் மீட்ட பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த வாகன விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வாகன விபத்தில் எட்டு பேர் காயம்

இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள்,
அதிகரித்து காணப்படுகிறது .இலங்கை காவல்துறையின் அலட்சியம் ,
மக்களின் விழிப்புணர்வு அற்ற செயலும் ஒரு காரணமாக உள்ளது .

சாலையோர விதிகளை கடைபிடிக்காது இயல்பு
,நடைமுறைகளுக்கு எதிராக ,செயல் படுவதும் இந்த விபத்துக்கள் ,
அதிகரித்து செல்ல காரணமாகிறது .

No posts found.