Tag: ரயில்வி பத்தில்
ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .
என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .
ஆபத்தான ரயில் கடவை
ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.
அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.
பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .













