Tag: பிரேமதாச
கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச
கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச
கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொள்ளும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
கொழும்பில் தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும்,இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை
மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச
இந்நடவடிக்கை தவறானது என்றும்,ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளதாகவும்,இந்த பதிவு முறைக்கு குறித்த
நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்,இதற்காக பொலிஸ் முறையை பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும், ஏதேனும் நியாயமற்ற முறை
நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என்றும், எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு
- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது
- மருத்துவர் கொலை குற்றவாளி கைது
- கைதிகள் சிறை மாற்றம் அங்கு கலவரம் வெடிக்கும் அபாயம்
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது
- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா
- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்
- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்தார்
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிறார் .
இவரை ஜனாதிபதியாகி நியமிக்குமாறு எதிர் கட்சிகள் பல பரிந்துரை செய்துள்ளதால் இவரே ஜனாதிபதியாகும் நிலை உருவாக்கம் பெறுகிறது எனப்படுகிறது .
அவ்வாறு இல்லாவிடினும் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சஜித் மகத்தான வெற்றியை தட்டி செல்வார் என எதிர்பார்க்க படுகிறது.
பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்க படலாம் என்கின்ற உள்ளக கசிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாவுக்கு அடுத்து மக்களினால் அதிக வாக்கு பெற்றவராக சஜித் உள்ளார் .
எனவே அவரே ஜனாதிபதியாக்க வேண்டும் எனப்து மக்கள் பொது நிலைப்பாடாகவும் உள்ளது குறிப்பிட தக்கது.
கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச
கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் தீர்வு காண முடியவில்லை எனின்
எம்மிடம் பொறுப்பை தாருங்கள் இல்லா விடின் வீட்டுக்கு செல்லுங்கள்
கள்வர்களுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாம் தயார் இல்லை என சஜித் தெரிவித்துள்ளார் ,
பாராளுமன்றில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன




















