ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது

குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும்

பஸ்தரிப்பிட கட்டிடங்களில்; தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் தரிப்பிடத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பஸ் தரிப்பிடத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

பஸ் தரிப்பிடத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக பயணி ஒருவர் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் நேற்று (15) பிற்பகல் முதல் அப்பகுதியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.