புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்காவினால் 37 அமைச்சர்கள் பதவி பிரமாணம்

ரணில் விக்கிரம சிங்காவினால் 37 அமைச்சர்கள் பதவி பிரமாணம்

ரணில் விக்கிரமசிங்காவினால் இன்று 37 இராயங்க அமைச்சர்கள் பதவி வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து முடிக்க பட்டுள்ளது .

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகி விளங்கும் ,ரணில் விக்கிரமசிங்காவினால் 37 இராயங்க அமைச்சர்கள் நியமிக்க பட்டுள்ளனர் .

எனினும் இவ்வாறு நியமிக்க பட்ட கொள்ளையர்களினால் ,வீழ்ந்து கிடக்கும் ,இலங்கையை மீளவும் கட்டி இழுத்து செல்ல முடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

    ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

    இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக,ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க

    ,பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

    பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பாராளுமன்றத்தை வந்தடைந்த அவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

    அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

    பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

    73 வயதான இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் 1993 முதல் 1994, 2001 முதல் 2004, 2015 முதல் 2018, 2018 முதல் 2019 மற்றும் 2022 வரை ஆறு முறை இலங்கையின் பிரதமராக பணியாற்றியுள்ளார்.