காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி
Posted in இலங்கை செய்திகள்

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி ,லோகந்தயா, மாஎலிய பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சீனப் பிரஜை ஒருவருக்கு நுவரெலியா முகாமில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் குழு இன்று உதவியது.

காயமடைந்த பெண்ணை கவனித்த STF அதிகாரிகள் உடனடியாக முதலுதவி அளித்தனர். கிடைக்கக்கூடிய உபகரணங்களைப் பயன்படுத்தி, அவர்கள் ஒரு

தற்காலிக ஸ்ட்ரெச்சரை மேம்படுத்தி, குறித்த பெண் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக சவாலான நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் அப்பெண்ணைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் படையினர் பயிர்ச்செய்கை.

கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் படையினர் பயிர்ச்செய்கை.

கொழும்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் பயிற்சியை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஹங்வெல்ல,

வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில்

பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து

திட்டத்துக்கு அமைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சீதாவாக்கை பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய விவசாய அதிகாரிகளுடன் இணைந்து சிவில் பாதுகாப்புப் படையினர்

திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்டு

வரும் பங்களிப்பை பாராட்டிய சீதாவாக்கை பிரதேச செயலாளர் கே.எஸ். தில்ஹானி ‘ நாட்டில் விவசாய உற்பத்தியில் நிலைபேறான

தன்மை அடைவதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்பு அவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.

வெலிகண்ன, லஹிருகம இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் 5 ஏக்கர் பயிர்ச்செய்கை காணி உழுது

பயிரிடப்பட்ட உள்ளதாக சிவில் பாதுகாப்புப் படை ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நிலந்த ரணசிங்க தெரிவித்தார்.