Tag: நினைவு நாள்
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு வேந்தல் செவ்வாய்க்கிழமை (26) அன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சாட்சி
தீவக மக்கள் ஒன்று கூடி
நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்று கூடி தமது உறவுகளை நினைவு கூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் ஏற்பாட்டாளர்
பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமார் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினர்.
26.08.1990 ஆம் ஆண்டு தீவக பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய
பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்பட்டு இருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள்
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வழு சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில்
கடந்த 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் பிரகலாதன் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் குறித்த படுகொலைக்கு சாட்சியான இடமாக கூறப்படும் சுமார் 50 க்கும் மேற்பட்ட உடலங்கள் இருப்பதாக கூறப்படும் கிணறு மக்களால் அடையாளம் காணப்பட்ட அவ்விடம் நினைவு கூறப்பட்டு வந்தது.
அதே நேரம் குறித்த சம்பவம் தொடர்பான வழு சாட்சியாக இருக்கும் படுகொலை செய்யப்பட்ட இருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள்
வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தனர்.
இதன் போது கணவனையும் சகோதரனையும் இழந்த தாயார் கூறுகையில் 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.
இதில் தனது கணவரும் சகோதரனும் கைது செய்யப்பட்டு இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்பட்டு எனது உறவினர் ஒருவரது வீட்டின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.
அதன் பின்னர் சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் சாட்சி. அத்துடன் எனது சகோதரனின் மனைவியையும் இன்னொரு இளம் பெண்ணையும் கைது செய்து ஒரு வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.
அவர்கள் இருவரையும் இராணுவத்தின் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த துடன் உள்ளாடைகளைக் கூட கையில் கொடுத்து அனுப்பிய கொடுமையையும் நான் நேரில் கண்டு அனுபவித்தேன்.
அதே போன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக் கொண்டு சேர்த்து கிணறுகளில் போட்டு
மூடினர். இவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூரப்படும் கிணறு. இந்த கிணறு போன்ற இன்னும் சில இருக்கின்றன என கண்ணீருடன் கூறினார்
தளபதி பால்ராஜ் நினைவு நாள்
தளபதி பால்ராஜ் நினைவு நாள்
தளபதி பால்ராஜ் நினைவு நாள் என்றாகும்,தமிழின விடுதலைக்காக தன்னைத் தந்து என்று தளபதி பால்ராஜ் அவர்கள் வீர மரணம் ஆகி ,பல ஆண்டுகள் கடக்கின்ற பொழுதும் ,அவனுடைய சாதனைகள் இன்றும் நீடித்து அவனை பேச வைக்கிறது.
தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக இரண்டாம் நிலை இராணுவ தளபதியாக செயலாற்றிய வன்.
களத்தில் பால்ராஜ் களமிறங்கினால் போர்முனை அதிரும்
பால்ராஜ் களமிறங்கிய போர்முனை அதிரும் , அவன் கையிருக்கும் கந்தகங்கள் கனரகங்கள் வெடிக்கும்.
எதிரி படைகள் எதிரே வர மறுக்கும் ,போர்முனையில் அவன் பேரரசன் பெரும் போர் வீரன்.
பால்ராஜ் நிற்கின்ற களம் தோற்காது ,வருகின்ற படைகள் பாடை கட்டி அணு ப்பப்படுவார்கள்.
துணிவு அசாத்திய சாதனை ,படைகளை வழி நடத்தும் தனித்திறன் ஆளுமை என்பன பால்ராஜ் இடம் என்றும் நிலைத்து நின்றது.
ஆனையிறவு படைத்தளத்தை விழுத்திய தளபதி பால்ராஜ்
ஆனையிறவு படைத்தளம் விழுத்துவதற்காக பால்ராஜ் தலைமையில் களம் இறக்கப்பட்ட போராளிகளை காத்து ,அந்த படைத்தளத்தை வீழ்த்தி வெற்றி சாதனை நடத்தியவன் பால்ராஜ்.
குடாரப்பு தரை இறக்கம் பால்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. இன்றும் அந்த சமர் உலக அரங்கில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எங்கள் தளபதி பால்ராஜ் அந்த களமுனை சாதனைகள் இன்றும் ஆப்பிரிக்க நாடு ஓன்றில் இராணுவத்திற்கு பயிற்சியாக கொடுக்கப்படுகிறது.
20000 ராணுவத்தை சுற்றி வளைத்த வீர தளபதி பால்றாஜ்
20000 ராணுவத்தை சுற்றி வளைத்து ,கூடாரப் வழியை முற்றுகையிட்டு அழித்து ஒழித்து அந்த பெரும் ஆனையிறவு படை முகாமை வீழ்த்தி சாதனை படைத்த சாதனை நாயகன்.
இன்று அவன் களத்தில் இல்லை .இதனால் தமிழினம் இதயம் உடைந்து அழுகிறது.
எங்கள் தமிழீழம் என்றோ விடிந்திருக்கும்
இவன் போல ஒரு பத்து தளபதிகள் கிடைத்து இருந்தால் ,எங்கள் ஈழம் என்றோ விடிந்திருக்கும் என்பது உதாரணம்.
விழி மூடி உறங்குகின்ற எங்கள் வீர தளபதியே ,நாளை உன்னை தேசம் வணங்கும்போது, எங்கள் தேச புலமாக மலர வேண்டும் என்பதை எமது கருத்தாகும்.
வன்னி மைந்தன்
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

சுனாமி பேரழிவு நினைவு நாள்
சுனாமி பேரழிவு நினைவு நாள்
இலங்கை முதல் பல நாடுகளில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது .இந்த பேரழிவில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகினர் .
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் ,இன்றும் மக்கள் மனதில் மறையாத வடுவாக பதிய பெற்றுள்ளது .
மனித உடல்கள் ,வீடுகள் ,சொத்துக்கள் நீரில் அடித்து செல்ல பட்டன .
மக்களை மிரள வைத்த ஆழிப் பேரலை நினைவின் துயரை சுமந்து ,இலங்கை இந்தியா முதல் ,பல நாடுகளில் மக்களினால் நினைவு கூற படுகிறது .












