Tag: தீபிகா படுகோனே
எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் -தீபிகா படுகோனே
எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் -தீபிகா படுகோனே
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இதுவரை எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.
புராண கதைகளில் தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே
2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது.
இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில்,
“மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்.
புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும்
அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.
தீபிகா படுகோனே
ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர்.
சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை.
தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா தீபிகா படுகோனேவின் தந்தை, தாய், தங்கை என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
குடும்பத்தினருடன் தீபிகா படுகோனே
இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா
படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார்.
பிரகாஷ் படுகோனே தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். மேலும் பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தந்தையுடன் தீபிகா படுகோனே
அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு
உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே
புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி
தீபிகா படுகோனே
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும்
மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோனே
அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே
புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.






