Tag: தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு வழங்க ப்பட்டுள்ளதாக அனுரா மனோர அரசு அறிவித்தல் விடுத்துள்ளது .
நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள்
யுத்த காலத்தில் நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்பிட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கையை விட்டு உயிர் பாதுகாப்பு காரணமாக .இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை வாழ் தமிழர்கள் .மீளவும் நாடு திரும்புவதற்கு தற்பொழுது இலங்கை அரசு தடைகளை விலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள்
குடி வரவு குடியாக சட்ட திருத்தங்கள் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை எடுத்து நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள், மீண்டும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு சென்ற தமிழ் அகதிகள் பெருமளவில் நாடு திரும்பும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு இந்த மக்கள் வருகின்ற பொழுதும் தங்களது காணிகளை அரசு அபகரித்துள்ளது. அந்த காணிகளை வழங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
அயல் வீட்டுக்காரர்களும் தமது காணிகளை எல்லையை போட்டு பிடித்துள்ளதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














